Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

26 வயது பெண் கொலை- தங்கச் சங்கிலி பறித்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்

Posted on July 3, 2025 by Admin | 276 Views

குருவிட்ட – தேவிபஹல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒருவரது உயிரிழப்பிற்கு காரணமாகியுள்ளது.

26 வயது இளம்பெண்ணொருவர், அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து, பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தெரிவித்ததின்படி, குற்றவாளிகள், குறித்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளனர். இதன்போது, வன்முறையாக தாக்கப்பட்ட பெண் படுகாயமடைந்த நிலையில், ரத்னபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரணமடைந்தவர், தேவிபஹல பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினரை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.