Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

கொத்மலை பஸ் விபத்து: 53 பேர் காயமடைந்தனர், 19 உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு

Posted on May 13, 2025 by News Author | 128 Views

கொத்மலை பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த 19 பேரின் உறுதிப்படுத்தப்பட்ட ஆளுடையவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த தொகை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்படவுள்ளது.

பொலிஸாரும், இலங்கை போக்குவரத்து சபையும், மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தினரும் முன்னெடுத்த விசாரணைகளின் படி பஸ்ஸில் எவ்வித இயந்திரக் கோளாறும் காணப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும், கொத்மலை பஸ் விபத்து தொடர்பான விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தலைமையில் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ருவண் குணசேகர, பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல மற்றும் பொறியியலாளர் கே.கே.காஹிங்கல ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.