Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

Posted on July 5, 2025 by Sakeeb | 281 Views

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் 14 வயதுச் சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்துடன் ரசிகர்களை மயக்கியுள்ளார்.

52 பந்துகளில் சதம் அடித்த இவர், இளம் வயதுக்கே சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீரராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம், 53 பந்துகளில் சதம் அடித்து இருந்ததுதான் இந்தத் தரவிலான சாதனையாக இருந்தது. வைபவ், அந்த சாதனையை ஒரே பந்து குறைவில் முறியடித்து, புதிய ஆளாகத் திகழ்கிறார்.

இந்த சிறுவனின் திறமைக்கு கிரிக்கெட் வட்டாரங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.