Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இஸ்ரேலை நோக்கிப் பறக்கும் மேலும் 29 இலங்கைப் பெண்கள்

Posted on July 6, 2025 by Admin | 187 Views

வீட்டு பராமரிப்பு பணிக்காக, மேலும் 29 இலங்கைப் பெண்கள் கொண்ட குழுவொன்று எதிர்வரும் ஜூலை 7 மற்றும் 9ஆம் தேதிகளில் இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ளது.

இவர்களின் விமான பயணச்சீட்டுகள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (ஜூலை 4) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 379 இலங்கை வீட்டு பராமரிப்பாளர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சி பெற்ற இலங்கை பராமரிப்பாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இஸ்ரேலில் மொத்தமாக 2,269 இலங்கையர்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலை, வேலை தேடும் பெண்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கும் வாய்ப்பாகவும், நாட்டின் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்கும் முக்கியத்துவம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.