Top News
| “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு | | கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு |
Aug 19, 2025

வரி முறைகள் டிஜிட்டல் மயமாக்கம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

Posted on July 8, 2025 by Admin | 116 Views

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை 2030க்குள் அடைய வேண்டிய முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (8) வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசேட கலந்துரையாடலில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது, வரி நிர்வாகத்தை திறமையாகச் செயல்படுத்த டிஜிட்டல் மயமாக்கல் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில், தற்போது பயன்பாட்டில் உள்ள வரி நிர்வாக தகவல் அமைப்பு (RAMIS) தொடர்பான பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதில், அதன் குறைபாடுகளை நிரூபித்து, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் வழிகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம், வரி முறையை எளிமைப்படுத்துவது, வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், முறைகேடுகளை குறைப்பது மற்றும் பரிவர்த்தனைகளுக்காக POS (Point of Sale) இயந்திரங்களை நாட்டில் பரப்புவது எனும் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.