Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

பாடசாலையின் உணவை சாப்பிட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் 8 பேர் கைது

Posted on July 9, 2025 by Admin | 143 Views

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையில், உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலை சமையலறையில் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளில், அளவுக்கு அதிகமாக செயற்கை நிறச்சாயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது, இது மாணவர்களில் உடனடி உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பள்ளி அதிபரின் அறிவுறுத்தலின்படி, உணவுக்காக பயன்படுத்தப்பட்ட நிறச்சாயங்கள் ஆன்லைன் வாயிலாக வாங்கப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவு விஷச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.