கொழும்பில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான முடிவு, இன்று (மே 19) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது. அந்த கலந்துரையாடலில் UNPமற்றும் SJB முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பொதுச் செயலாளர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கை:
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல
இவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், மக்களால் பெரும்பான்மை வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கான யோசனைக்கு இரு கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.