(அபூ உமர்)
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த கல்வியாளர் திரு. த. கணேசரெத்தினம் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பீடாதிபதிக்கு கல்வித் துறை மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நியமனம், கல்வித்துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், கல்லூரியின் கல்வி தரத்தை மேம்படுத்தும் புதிய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.