Top News
| உயிர்த்த ஞாயிறு வழக்கில் மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது | | 2025 ஆம் ஆண்டு உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | | 13 வயதுக்கு முன் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் கொடுப்பது பற்றி 163 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி முடிவு |
Jul 23, 2025

பொத்துவிலில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது!

Posted on July 15, 2025 by Admin | 133 Views

பொத்துவில் பிரதேசத்தில் சட்ட விரோதமாக பொதுமக்கள் இடத்தில் மேலாடையின்றி நடந்து சென்றதாக கூறப்படும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு பெண் ஒருவர், பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீச் ஹட் ஹோட்டலிலிருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில்வரை குறித்த பெண் மேலாடையின்றி நடந்து சென்ற சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தது.

விசாரணைகளில், அந்த பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

பின்னர், கைது செய்யப்பட்ட பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிமன்றம் அவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒரு மாத தண்டனையை விதித்தது. மேலும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.