Top News
| 2025 உயர்தர பரீட்சைக்கான திகதி வெளியானது  | | ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயில் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவு | | இலங்கையில் ஓரிரு மாதங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? |
Jun 25, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு அதிரடிப் படை செயல்பாட்டில்

Posted on May 20, 2025 by Admin | 94 Views

கொடூரமான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சிக்கவைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக, தற்போது 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை இந்த சிறப்பு குழுக்கள் விசாரித்து வருகின்றன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், கடந்த ஆண்டில் மட்டும் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தச் சம்பவங்களில் 31 தாக்குதல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனை ஒடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.