இலங்கையில் டீனியா (Tinea) எனப்படும் பூஞ்சை தோல் நோய்த் தொற்றுகள் கடந்த ஒரு தசாப்தத்தை ஒப்பிடுகையில், தற்போதைய நிலையில் கணிசமாக அதிகரித்துள்ளன என்று தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜனக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், இன்று தோல் சிகிச்சை நிலையங்களை நாடும் ஒவ்வொரு ஐந்து நோயாளிகளிலும் ஒருவருக்கு டீனியா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறினார்.
டீனியா என்பது பொதுவாக “ரிங்வார்ம்” என அழைக்கப்படுவதாலும் புழு போன்ற தோற்றத்தினால் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. உண்மையில் இது புழுவால் ஏற்படுவது அல்ல; Dermatophytes எனப்படும் ஒரு வகை பூஞ்சைகள் தான் இந்த தொற்றுக்கு காரணமாகின்றன. இவை மனிதர்களின் தோல், முடி மற்றும் நகங்களில் பரவி தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.
முக்கிய அறிகுறிகள்:
தோலில் இத்தகைய மாற்றங்கள் காணப்பட்டால், மருத்துவ பரிசோதனையின் மூலம் இதை உறுதி செய்யலாம். இந்த நோய் எந்தவிதமான வயதினரையும் பாதிக்கலாம். ஆனால் தற்போது சிறுவர்களிடையே இதன் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் உடல் பகுதிகளில் டீனியா காணப்படும் சம்பவங்கள் அதிகம் என்கிறார் டாக்டர் அகரவிட்ட.
குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், சுறுசுறுப்பான குழந்தைகளுக்கே அல்லாமல் ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
பூஞ்சை தொற்றுக்கான பரவல் காரணிகள்:
மருத்துவர் மேலும் கூறியதாவது, “ஸ்டீராய்டு கலந்த கிரீம்கள் இன்று மருந்தகங்களில் பரவலாகக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை சரியான ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவது, நோயின் தோற்றத்தை மாறடிக்கச் செய்து, தவறான சிகிச்சையை தூண்டிவிடும் அபாயம் ஏற்படுத்துகிறது. இதனால், நிலைமை மோசமாகி, விலை உயர்ந்த மருந்துகள் நீண்ட காலம் பயன்படுத்த வேண்டியதாயும் முடிவடையலாம்.”
சிறப்பு ஆலோசனை:
அரிப்பு, சிவப்பு திட்டுகள், தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய சிகிச்சை செய்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவமனை சென்று ஆலோசனை பெறுவது மிக அவசியம்.