Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டிலும் உரத்தின் விலை உயர்வு

Posted on July 25, 2025 by Admin | 150 Views

உலக சந்தையில் உர விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இதன் நேரடி தாக்கம் நாட்டின் உள்நாட்டுப் சந்தையிலும் உர விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விவரங்களை விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த், நாட்டின் பல்வேறு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பகிர்ந்துள்ளார்.

“உர விலை அதிகரிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், விவசாயிகளுக்கு சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் வலியுறுத்தினார்.