இலங்கை உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன, நாட்டின் 49வது பிரதம நீதியரசராக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவரின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நீண்டகால நீதித்துறை அனுபவம் கொண்ட ப்ரீத்தி பத்மன் சூரசேன, 2007 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக தனது வழக்குப்பாதையை ஆரம்பித்தார். தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தனது பணிக்காலத்தில், 2018ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் 2019ஆம் ஆண்டு ஜனவரி 9 வரை தலைவராக பணியாற்றிய அவர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
அவர் தமது நீண்ட நீதித்துறை பயணத்தில் பல முக்கியமான மற்றும் சிக்கலான வழக்குகளில் தலைமை வகித்து தீர்ப்பளித்துள்ளார்.
அக்காலம் வரை கல்வியறிவு மற்றும் சட்டப்பாதையில் பயணித்த அவர், 1985ஆம் ஆண்டு பௌதீகவியல் துறையில் பட்டம் பெற்றதையும், 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து, சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக தனது பணியினை ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நீதித்துறையின் வரலாற்றில் ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்ற பிரதம நீதியரசராகும் இந்த நியமனம், நீதித்துறையின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.