Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இனி மொபைல் செயலியில் செலுத்தலாம்

Posted on July 28, 2025 by Admin | 192 Views

மேல் மாகாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை இனிமேல் மொபைல் செயலி மூலம் எளிதாக செலுத்த முடியும்.

GovPay என்ற புதிய டிஜிட்டல் சேவையை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரம் மற்றும் முயற்சி சுமை குறையும் வகையில் GovPay செயலி பெரும் பயனளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது, அரசின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், நடைமுறை பணப்பரிவர்த்தனைகளை மின்னணுவாக்கும் அடித்தள நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.