Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

சாய்ந்தமருது பிரதேச மேம்பாடு குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

Posted on July 30, 2025 by Admin | 138 Views

(அபூ உமர்)

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம், பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் நடைபெற்றது.

இதில், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரான எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம். ராபீ, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், மாவட்ட தலைமை பொறியியலாளர் ஏ. சாஹீர் உள்ளிட்ட பல துறை தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதேச அபிவிருத்தி திட்டங்கள், நிர்வாக சிக்கல்கள், எதிர்கால திட்டமிடல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.