Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

யூடியூப் ஆபாசக் கதைகளில் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தியவருக்கு சிறைத் தண்டனை 

Posted on July 31, 2025 by Admin | 361 Views

பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி யூடியூபில் ஆபாசக் கதைகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கடுவெலையைச் சேர்ந்த ஒருவருக்கு, இன்று (31) கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி ஜயதுங்க ஐந்து ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, குற்றப்புலனாய்வுத்துறையின் கணினி குற்ற விசாரணைப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “டோப்பியா” எனும் பெயரில் செயல்பட்ட திமுது சாமர என்பவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

கொழும்பு பகுதியை சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர், தனது புகைப்படம் யூடியூபில் ஆபாசக் கதைகளுடன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரகசியப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய, சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது.