Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

கடந்த 6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் – அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Posted on August 1, 2025 by Admin | 252 Views

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் பணி தவறுகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசாங்கமாக நாம் எந்தவொரு நபருக்கும் எதிராக, அவரின் பதவி அல்லது அந்தஸ்து என்னவென்பதைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை கடைப்பிடித்தே தீருவோம்,” என்றார்.

அரச ஊழியர்களின் குற்றச்செயல்கள் முழு பொது சேவையின் நம்பிக்கையையே பாதிப்பதாகவும், அது பொருட்படுத்த முடியாத ஒரு விடயமாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“இடைநீக்கம் செய்யப்பட்ட பலர், பணிப்பற்று, நேர்மை, வேலை பற்றிய அக்கறை இல்லாமல் செயல்பட்டதால் இப்படியான நிலை உருவாகியுள்ளது. சிலர் 25 ஆண்டுகள் சேவை செய்த பிறகும், ஓய்வூதியம் இழந்தும், சிறைக்குச் சென்ற நிகழ்வுகள் நம் முன்னிலையில் உள்ளன,” என அவர் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ பதவிகளை வகித்தவர்களாகிய குடிவரவு கட்டுப்பாட்டு ஜெனரல், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், மற்றும் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் ஆகியோரும், கடந்த காலங்களில் சட்டவிரோதச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு, சிலர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒரு பதவியை வெறும் வேலை என்று நினைத்தால், அதன் மீது பற்றும் பொறுப்பும் இல்லாமல் நடந்துகொண்டால், இந்த மாதிரியான பரிதாபங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியாது. அதனால்தான், எத்தனையோ அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம் அரசு ஒழுங்கை நிலைநாட்ட சட்டத்தை துரிதமாக செயல்படுத்தும்,” என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால