Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

கறிக்குழம்பு சட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

Posted on August 5, 2025 by Admin | 224 Views

ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் சென்ற நிலையில், ஒரு 2 வயது சிறுவன் கறிக்குழம்பு கொதிக்கும் சட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

சிவக்குமார் என்ற நபர் தனது குடும்பத்துடன் வழிபாட்டிற்காக அப்பகுதிக்கு சென்றிருந்தார். வழிபாட்டுக்குப் பின்னர் சமையலுடன் தொடர்புடைய பணிகள் நடந்து கொண்டிருந்த வேளையில், அவரது மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது சட்டியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்