Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் இன்றுடன்(06) தடை

Posted on August 6, 2025 by Admin | 227 Views

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவை 2025 ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தடையை மீறுவதன் மூலம் விதிமீறல் செய்யும் ஆசிரியர்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.