Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜூன் 17ஆம் திகதி விசாரணைக்கு 

Posted on May 22, 2025 by Hafees | 118 Views

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரக்காந்தன், பிள்ளையான் என அழைக்கப்படும், அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்த மனு எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட நிலைமை அவரது அடிப்படை உரிமைகளைக் பாதித்துள்ளதாகக் கூறி, அவர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதியரசர்கள் மகிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இன்று (22) அழைக்கப்பட்டது.