Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வியட்நாம் பெண் மொரகல்ல கடலில் மூழ்கி மரணம்

Posted on August 11, 2025 by Admin | 181 Views

மொரகல்ல கடற்கரையில் இன்று (11) காலை நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாம் நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவலின்படி, அந்தப் பெண் நண்பர்கள் குழுவுடன் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது பலத்த அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் தேடுதல் நடவடிக்கையின் போது, அவரது உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.