Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

முதல் மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பட்டத்தினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்தும் டாக்டர் சுதைஸ்

Posted on August 13, 2025 by Admin | 121 Views

இன்று வெளியான மகப்பேற்று வைத்திய நிபுணர் இறுதிப் பரீட்சை முடிவுகளின் படி, பாலமுனையைச் சேர்ந்த டாக்டர் ஏ.எல்.சுதைஸ் முகம்மட் அவர்கள் சித்தி பெற்றுள்ளார்.

பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் இருந்து மகப்பேற்று வைத்திய நிபுணராக உருவாகும் முதலாவது மருத்துவர் இவரே என்பதால், இச் சாதனையால் பாலமுனை மண்ணும் முழு அட்டாளைச்சேனை பிரதேசமும் பெருமை அடைகிறது.

டாக்டர் சுதைஸ் முகம்மட் அவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, நாமும் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் அகமகிழ்கிறோம்