Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இலங்கை கல்வி நிர்வாக சேவைத் தெரிவின் ஊடாக அக்கறைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்த மூவர்

Posted on August 14, 2025 by Admin | 237 Views

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (SLEAS) தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு (SLEAS) தெரிவு செய்யப்பட்டுள்ளமை வலயத்திற்கு பெருமை சேர்க்கும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு (SLEAS) தெரிவு செய்யப்பட்டுள்ள ஒலுவிலைச் சேர்ந்த எஸ்.ஹாஸிக், அக்கறைப்பற்றைச் சேர்ந்த என்.எம்.எம்.சாலிஹ், பொத்துவிலைச் சேர்ந்த ஏ.ஜே.அதீக் ஆகியோர்களுக்கு எமது செய்தித்தளம் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் எதிர்கால பணிகள் வெற்றியுடனும் சிறப்புடனும் அமைவதுடன் இவர்களுக்கான நியமனம் 2025.09.01ம் திகதி வழங்கப்படவுள்ளது.

எஸ்.ஹாஸிக் ஒலுவில் பிரதேசத்தின் முதலாவது SLEAS என்பதன் ஊடாக ஒலுவில் மண்ணும் பெருமையடைகிறது.