Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனையில் புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted on August 17, 2025 by Admin | 398 Views

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தேசிய திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பயனாளிக்கான புதிய வீட்டின் அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (16.08.2025) சனிக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை 4ஆம் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் A.C. அப்கர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர்கள், செயற்பட்டாளர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.