Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இடைநிறுத்தப்பட்ட நாடளாவிய காணி வர்த்தமானி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted on May 24, 2025 by Admin | 155 Views

நாடளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட காணிகள் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் குறித்து, நேற்று (23) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஆகியோர் பங்கேற்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள காணிகளை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி, சமூகத்தின் பல தரப்புகளில் விமர்சனங்களை ஏற்படுத்தியதை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.

மேலும், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.