Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு செப்டம்பரில் நிறைவு 

Posted on August 28, 2025 by Admin | 363 Views

சட்டத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் வரவிருக்கும் செப்டம்பரில் நிறைவு பெறும் என்று குழுத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், வரைவு மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தற்போது இரண்டாவது முறையாக ஆய்வு செய்யப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வருவதற்காகவே அமைச்சரவை அனுமதியுடன் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

புதிய சட்டம்:

  • உலகளாவிய நவீன பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது,
  • உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது,
  • சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுடன் இணங்குவது

எனும் நோக்கங்களை கொண்டுள்ளதாக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன.