Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு செப்டம்பரில் நிறைவு 

Posted on August 28, 2025 by Admin | 219 Views

சட்டத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் வரவிருக்கும் செப்டம்பரில் நிறைவு பெறும் என்று குழுத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், வரைவு மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தற்போது இரண்டாவது முறையாக ஆய்வு செய்யப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வருவதற்காகவே அமைச்சரவை அனுமதியுடன் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

புதிய சட்டம்:

  • உலகளாவிய நவீன பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது,
  • உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது,
  • சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுடன் இணங்குவது

எனும் நோக்கங்களை கொண்டுள்ளதாக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன.