Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தெரிவு

Posted on May 26, 2025 by Admin | 268 Views

பத்து வருடங்களுக்குப் பின்னர், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட பாடசாலைகள் கிரிக்கெட் போட்டி, அண்மையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இப்போட்டியின் இறுதியில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மற்றும் அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய அணிகள் மோதின. கடும் போட்டிக்குப் பிறகு, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் வெற்றி பெற்றாலும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாகாண மட்டத்துக்கான தெரிவை உறுதிப்படுத்தியது.

இந்த முன்னேற்றம், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.