Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

2026 ஜனவரியில் நிலுவை சம்பள உயர்வு வழங்கப்படும் – ஜனாதிபதி

Posted on September 2, 2025 by Admin | 182 Views

பொதுத்துறை ஊழியர்களுக்கான நிலுவை சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஜனாதிபதி, “அடிப்படை சம்பளத்தின் ஆரம்ப கட்ட உயர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. மீதமுள்ள நிலுவை உயர்வுகள் 2026 ஜனவரியில் வழங்கப்படும்,” என்றார்.

மேலும் அவர், “நாட்டின் அபிவிருத்திக்குத் திறமையான மற்றும் வலுவான அரசுத் துறை அவசியம். உலகின் ஒவ்வொரு முன்னேற்ற நாடுகளுக்கும் வலுவான பொதுத்துறை உள்ளது. அதேபோல் நாமும் வலுவான பொதுத்துறையை உருவாக்குவோம்,” என வலியுறுத்தினார்.