Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

2026 ஜனவரியில் நிலுவை சம்பள உயர்வு வழங்கப்படும் – ஜனாதிபதி

Posted on September 2, 2025 by Admin | 426 Views

பொதுத்துறை ஊழியர்களுக்கான நிலுவை சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஜனாதிபதி, “அடிப்படை சம்பளத்தின் ஆரம்ப கட்ட உயர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. மீதமுள்ள நிலுவை உயர்வுகள் 2026 ஜனவரியில் வழங்கப்படும்,” என்றார்.

மேலும் அவர், “நாட்டின் அபிவிருத்திக்குத் திறமையான மற்றும் வலுவான அரசுத் துறை அவசியம். உலகின் ஒவ்வொரு முன்னேற்ற நாடுகளுக்கும் வலுவான பொதுத்துறை உள்ளது. அதேபோல் நாமும் வலுவான பொதுத்துறையை உருவாக்குவோம்,” என வலியுறுத்தினார்.