Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை

Posted on September 7, 2025 by Admin | 105 Views

பாடசாலை நடைபெறும் நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

அந்த பணியகத்தின் அறிவிப்பின்படி, பள்ளி நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரைவும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரைவும் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வீதிகளில் இயங்கக்கூடாது.

அண்மையில் மாணவர்கள் பயணம் செய்த பாடசாலை வேனுடன் மணல் லொறி மோதி ஏற்பட்ட விபத்தையடுத்து, இதுகுறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பணியக பணிப்பாளர் நாயகம் திருமதி தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும், தடைசெய்யப்பட்ட நேரங்களில் இயங்கும் வாகனங்கள் சாலையோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகவல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களின் மூலம் கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.