Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

நேபாளத்தில் சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான போராட்டத்தில் 14 பேர் உயிரிழப்பு

Posted on September 8, 2025 by Admin | 100 Views

நேபாளத்தில் சுமார் 26 சமூக ஊடகங்களைத் தடை செய்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தலைநகர் காத்மாண்டுவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் நேபாள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.