Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

நேபாளத்தில் சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான போராட்டத்தில் 14 பேர் உயிரிழப்பு

Posted on September 8, 2025 by Admin | 237 Views

நேபாளத்தில் சுமார் 26 சமூக ஊடகங்களைத் தடை செய்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தலைநகர் காத்மாண்டுவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் நேபாள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.