Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பெரியநீலாவணையில் 37 வயது பெண் வெட்டிக் கொடூரக் கொலை

Posted on May 30, 2025 by Admin | 199 Views

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் இன்று (மே 30) காலை பெண்ணொருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான இவர், கடுமையான தாக்குதலுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டதாக பெரியநீலாவணை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில், அவர் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவரின் கணவர், மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக, பெரியநீலாவணை காவல்துறையினர் மற்றும் அம்பாறை தடயவியல் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.