Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒலுவில் களியோடை ஆற்றின் கரையில் உயிருடன் மீட்பு

Posted on September 28, 2025 by Admin | 222 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் இன்று காலை (28) இதயத்தை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளம் பெண் குழந்தையானது ஒலுவில் களியோடை ஆற்றின் கரையில் இனம் தெரியாத நபரால் கைவிடப்பட்ட நிலையில் மீன் பிடிக்க சென்ற ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அம்மீனவர் உடனடியாக குழந்தையை மீட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மருத்துவர்களின் பராமரிப்பில் தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆழமாக நெகிழச் செய்துள்ளது.