Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இன்று பல மாகாணங்களில் கனமழையும் பலத்த காற்றுக்கும் சாத்தியம்

Posted on October 3, 2025 by Admin | 92 Views

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பில், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் அபாயங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.