Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் வெளியிடப்பட்ட ‘மாற்று விழி’ சஞ்சிகை 

Posted on October 3, 2025 by Admin | 99 Views

(எம்.ஜே.எம். சஜீத்)

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் விஷேட கல்விப் பிரிவின் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிலுநர்களால் தொகுக்கப்பட்ட ‘மாற்று விழி’ சஞ்சிகை வெளியீட்டு விழா 2025 அக்டோபர் 2ஆம் திகதி கல்லூரி ஆராதணை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விரிவுரையாளர் அபூபக்கர் நளீம் தலைமையில் இடம்பெற்ற இத்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரி பீடாதிபதி எம்.சி. ஜூனைட் கலந்து கொண்டு சஞ்சிகையை வெளியிட்டார்.

சஞ்சிகை விமர்சனத்தை முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் (முறைசாரக் கல்வி) எம்.எல். முஹம்மட் லாபிர் நிகழ்த்தினார் மற்றும் கல்லூரியின் நிர்வாக உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர், கல்வி உப பீடாதிபதி ஏ.ஜி. அஹமட் நழீர், பதிவாளர் எச்.எம்.ஏ. ஹசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் விரிவுரை இணைப்பாளர்கள், பீடத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.