Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஒலுவிலில் வரலாறு படைத்த எஸ். பாத்திமா சபானா பொத்துவில் பிரதேச செயலக கணக்காளராக பொறுப்பேற்பு

Posted on October 8, 2025 by Admin | 171 Views

(ஒலுவில் செய்தியாளர்)

பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி எஸ். பாத்திமா சபானா நியமிக்கப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமத் நஸீல் தலைமையில் 07.10.2025ம் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் புதிய கணக்காளர் வாழ்த்தி வரவேற்கப்பட்டதுடன், அவருக்கான சிறப்பு வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

செல்வி பாத்திமா சபானா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவராகும். மேலும், இலங்கை கணக்காளர் சேவைத் தேர்வில் வெற்றி பெற்று ஒலுவிலில் சித்தியடைந்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அவரது நியமனம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாகத் துறைக்கு புதிய உந்துசக்தியாக அமையும் எனக் கருதப்படுகிறது.