Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியக்கடதாசில் ஒப்பம்

Posted on May 17, 2025 by Admin | 387 Views

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 8 வட்டாரங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும், கட்சியால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியில் ஒப்பமிடும் நிகழ்வும் இன்று (16.05.2025) மக்கள் பணிமனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பை மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஏ. சி. சமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.