Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மே 03 வரை விளக்கமறியல் 

Posted on May 20, 2025 by Hafees | 217 Views

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையில், மீண்டும் மே 03ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று தனித்தனி முறைப்பாடுகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரம்புக்வெல்ல, இன்று (20) சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் மே 03 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.