Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

18 இலட்சம் ரூபா வருமானத்திற்கு மேல் பெறுவோருக்கு வரி 10% வீதம் ஆக உயர்வு

Posted on May 20, 2025 by Hafees | 226 Views

2024 ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், வருடாந்தம் 18 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விதிக்கப்படும் நிறுத்தி வைத்தல் வரி (Withholding Tax) 5% இலிருந்து 10% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, குறைந்த வருமானம் பெறுவோர் மீது இத்தகைய வரி பொறுப்பை ஏற்படுத்தாமல் இருக்க, சுய பிரகடனத்தை சமர்ப்பிக்க புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வங்கிக் கணக்குகள் திறக்கும் பொழுது வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) வழங்குவதையும் கட்டாயமாக்கஉள்நாட்டு வரிவிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது.