Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

மைத்திரிபால-ரணில் பேச்சுவார்த்தை வெற்றி

Posted on May 21, 2025 by Admin | 208 Views

கொழும்பு மாநகர சபை உட்பட, எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரம் நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு மலர் வீதியில் அமைந்த செயல்பாட்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்தப் பேச்சுவார்த்தைகள் எதிர்கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டன என்றும், இனிவரும் நாட்களில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், உள்ளூராட்சி தேர்தல்கள் முடிந்தும் பல கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்னும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி நிர்வாகத்திற்கான பதவியமைப்புகளை விரைவில் நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.