Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

மத்திய மலைநாட்டில் விபத்துகள் அதிகம் நிகழும் வீதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க திட்டம்

Posted on May 21, 2025 by Hafees | 440 Views

மத்திய மலைநாட்டில் வாகன விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில், வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

விபத்துக்கள் நிகழும் இடங்களை அடையாளம் காணும் பணியில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் விபத்துக்கள் பதிவான பகுதிகளுக்கு மேலதிக கவனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை அவற்றில் 40 இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.