Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் மூவர் இலஞ்ச வழக்கில் கைது

Posted on May 23, 2025 by Hafees | 107 Views

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று மேற்கொண்ட நடவடிக்கையில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், 4 மில்லியன் ரூபாய் பெறுமானமான இலஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது