Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 3 உறுப்பினர்கள்

Posted on May 24, 2025 by Admin | 334 Views

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மூன்று உறுப்பினர்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளனர்.

தீகவாபி வட்டாரத்தில், மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்த உறுப்பினராக MLA.Saman வெற்றி பெற்றுள்ளார். அதோடு, பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், பட்டியல் மூலம் இரண்டு பெண்கள் CM.ஜனுசா (Janusa) மற்றும் S. பஹீமா (Fahima) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வெற்றியுடன், தேசிய மக்கள் சக்தி (NPP), அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனது பலத்தை நிலைநிறுத்தி, எதிர்கால நடவடிக்கைகளுக்கு முன் நகரும் வாய்ப்பை பெற்றுள்ளது.