Top News
| ஆசிரியர் அதிபர் மீதான வாள் தாக்குதல் குறித்து திருக்கோவில் கல்வி வலயம் கண்டனம் | | ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல் – அக்கரைப்பற்று பகுதியில் பதற்றம்! | | முந்தைய அரசாங்கத்தின் தவறுகளால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ |
May 25, 2025

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக இஷ்னாப் அன்வர் நியமனம்

Posted on May 24, 2025 by Admin | 104 Views

(அபூ உமர்)

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக தோழர் இஷ்னாப் அன்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நியமனம், தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் ஏ. எம். அர்பான் மற்றும் அமைப்பாளர் எஸ். எம். றியாஸ் ஆகியோரின் தலைமையிலான நிர்வாகக் கூட்டத்தில் நேற்று (ஜூன் 23) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடை பெற்றது.

நீண்டகாலமாகக் கட்சியின் களச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இஷ்னாப் அன்வர், தனது அர்ப்பணிப்பு மற்றும் பணிச்செயல் திறமையினால் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நியமனம் அட்டாளைச்சேனையில் தேசிய மக்கள் சக்தி கட்சி இளைஞர்களின் இயக்கத்திற்கு புதிய ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.