Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தெரிவு

Posted on May 26, 2025 by Admin | 416 Views

பத்து வருடங்களுக்குப் பின்னர், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட பாடசாலைகள் கிரிக்கெட் போட்டி, அண்மையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இப்போட்டியின் இறுதியில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மற்றும் அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய அணிகள் மோதின. கடும் போட்டிக்குப் பிறகு, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் வெற்றி பெற்றாலும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாகாண மட்டத்துக்கான தெரிவை உறுதிப்படுத்தியது.

இந்த முன்னேற்றம், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.