Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை நிறைவு புதிய நேரம் நடைமுறை

Posted on May 29, 2025 by Hafees | 267 Views

கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் சேவையை 24 மணிநேரமும் முன்னெடுக்கும் நடைமுறை, எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவைக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் தெரிவித்துள்ளது.