Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அஞ்சல் அதிகாரிகள் வேலைநிறுத்தம் முடிந்தது – தீர்வு இல்லையெனில் மீண்டும் போராட்டம்

Posted on May 30, 2025 by Admin | 305 Views

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (மே 30) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக சுமார் ரூ.70 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியிருந்தாலும், அது உண்மைக்கு புறம்பானதாகும் என அஞ்சல்மா அதிபர் பி. சத்குமார தெரிவித்தார்.

“அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லாமல் கூறப்படும் இத்தகைய கணக்கீடுகள் தவறானவை,” என்று அவர் கூறினார்.

இந்த பணிப்புறக்கணிப்பின் பின்புலமாக, அதிகாரிகள் சங்கம் தங்கள் 10 அம்ச கோரிக்கைகளை அடங்கிய ஆவணத்தை இன்று சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சங்கத்தின் தரப்பில், கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.