Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

Posted on May 30, 2025 by Hafees | 247 Views

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்புஇன்றும் (மே 30) தொடர்கிறது.

மே 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடங்கிய இந்தப் பணிப்புறக்கணிப்பு, ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பலர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.