பாணந்துறை, வலான பகுதியில் இன்று (ஜூன் 2) காலை ஒரு வீட்டிற்கருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உந்துருளியில்(Moter Cycle)வந்த அடையாளம் தெரியாத இருவர், நபரொருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், துப்பாக்கி செயலிழந்ததால் குறித்த தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.