Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு 

Posted on June 5, 2025 by Arfeen | 221 Views

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு: விவசாய காப்பீட்டு சபை அறிவிப்பு

தெற்பான மழையால் சேதமடைந்த நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வேளாண் மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

இதற்காக, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரையிலான தொகை இழப்பீடாக வழங்கப்படும்.

பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகள், விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் 1918 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்து தங்களின் விவரங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.