Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

காசா நரகத்தைவிட மோசமாக மாறியுள்ளது

Posted on June 5, 2025 by Admin | 174 Views

காசாவின் தற்போதைய நிலை நரகத்தையுங்கூட மீறியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்யாரிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மனித நேயம் இன்று பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

போரையும், பாலஸ்தீன மக்களின் துயரத்தையும் முடிவுக்கு கொண்டுவர, மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க சர்வதேச நாடுகள் செயற்பட தவறியுள்ளன என அவர் விமர்சனம் செய்தார்.

காசாவில் உள்ள ஒரு நிவாரண மையத்திற்கு அருகில், உதவி பெற வந்த பொதுமக்கள்மீது இஸ்ரேல் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து அவர் பேசும் போதே, இந்த அதிரடியான கருத்துகள் வெளியாகின.